27 விவசாயிகளுக்கு தீவனம் நறுக்கும் இயந்திரம்

ராசிபுரம் அருகேயுள்ள சின்னகாக்காவேரி கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனம் நறுக்கும் இயந்திரம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் அருகேயுள்ள சின்னகாக்காவேரி கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு மானிய விலையில் தீவனம் நறுக்கும் இயந்திரம் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 இதில், நாமக்கல் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் பொறியாளர் ஜே.மோகன்பாரதி முன்னிலை வகித்தார். இதில் ஒருங்கிணைந்த நீர்வடி மேலாண்மை திட்டத்தின் கீழ், நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில், பண்ணை வள மேம்பாட்டு பணிகள் நீர்வடி மேம்பாட்டு முகமையின் சார்பில் சீராப்பள்ளி, ஒடுவன்குறிச்சி, டி.பச்சுடையாம்பாளையம், தொப்பப்பட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 27 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள தீவனம் நறுக்கும் இயந்திரம் 20 சத பங்கு தொகை செலுத்திய விவசாயிகள் 27 பேருக்கு வழங்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.4.86 லட்சம்.
 இதை சேந்தமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.சந்திரசேகரன் விவசாயிகளுக்கு வழங்கினார்.
 இதில், நீர்வடிப் பகுதி வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் கே.செல்வகுமார், டி.ஆனந்தகுமார், எம்.மணிவேல், சின்னகாக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.நாகசந்திரன், துணைத் தலைவர் கே.சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com