ஆக.15-இல் மதுபான கடைகளை மூட உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு, அன்று இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், எப்எல் 1 முதல் 11 வரையிலான உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
 அரசு உத்தரவின்படி வரும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு, அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுக்கூடங்களை மூடி வைக்க வேண்டும்.
 இந்த நாளில் இந்திய தயாரிப்பு, அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com