ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்

ரஜினி காந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் என்றார் திரைப்பட நடிகர் விவேக்.

ரஜினி காந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியலுக்கு வருவதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் என்றார் திரைப்பட நடிகர் விவேக்.
 நாமக்கல் கிரீன்பார்க் பள்ளியில் நடைபெற்ற கலை விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கிரீன் கலாம் என்ற இயக்கத்தை உருவாக்கி தமிழகம் முழுவதும் இதுவரை 28.90 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காக வைத்துள்ளோம்.
 தமிழகத்தில் மழை இல்லாததால், நிலத்தடி நீர் குறைந்துள்ளது. வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கன்றுகள் நட வேண்டுமென மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் ஊக்கப்படுத்தியதால்தான் தற்போது அனைத்து தரப்பினரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
 தமிழக மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தாமாகவே முன்வந்து தூர்வாரி, மரக்கன்றுகளை நட முன்வர வேண்டும். மரக்கன்று நடும் பணி மக்கள் இயக்கமாக மாற வேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். நடிகர்கள் ரஜினி காந்த், கமல்ஹாசன் ஆகியோர் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் என்பதால், மக்கள் ஆவலுடன் உள்ளனர். அரசியலுக்கு வருபவர்கள் தன்னலமற்றவர்களாக, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் தமிழகத்துக்கு நல்லது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com