மாடுகளை ஏற்றிச் செல்ல சந்தையிலேயே தடையில்லா சான்றிதழ் வழங்கக் கோரிக்கை

மாடுகளை ஏற்றிச் செல்ல சந்தையிலேயே தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாடுகளை ஏற்றிச் செல்ல சந்தையிலேயே தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே மாடுகள் வாங்க, விற்க வியாபாரிகள் கூடும் இடமாக புதன்சந்தை விளங்கி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பசுவதை தடை சட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து வெளிமாவட்டங்களுக்கு மாடுகள் விற்பனை செய்வது மிகவும் குறைந்ததால் சந்தை வெறிச்சோடியது.
இந்த நிலையில் விற்பனைக்கான தடை நீங்கியதால் கடந்த 2 வாரங்களாக புதன்சந்தை இயல்பு நிலைக்குத் திரும்பி மாடுகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. தற்போது வறட்சி நிலவுவதாலும், தீவன தட்டுப்பாட்டாலும் மாடுகளை அதிகளவில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
சினையுடன் கூடிய பசுமாடு அல்லது எருமை மாடு போன்றவை இதுவரை ரூ. 30 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. தற்போது ரூ. 5,000 கூடுதலாக ரூ. 35 ஆயிரம் விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து வியாபாரிகள் மேலும் தெரிவித்தது:
புதன்சந்தையிலிருந்து விற்கப்பட்ட மாடுகள் வாகனங்களில் பிற மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லும்போது, வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் தடையில்லா சான்றிதழ் கேட்கின்றனர். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே, மாடுகள் கூடும் சந்தை அருகில் செயல்பட்டு வரும் அரசு கால்நடை மருத்துவர் மூலம் வியாபாரிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com