ஸ்ரீ எஸ்.பி.கே. முதுநிலைப் பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் நடைபெற்ற ஏரோபிக்ஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
கோவாவில் சர்வதேச அளவிலான ஏரோபிக்ஸ் பிட்னஸ் மற்றும் ஹிப்ஹாப் சாம்பியன்ஷிப் 2017 நடத்திய கோவா இந்தியன் ஓபன் போட்டிகள் கோவாவின் பனாஜியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் ஸ்ரீ எஸ்.பி.கே. பப்ளிக் முதுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் 12 மற்றும் 14 வயதிற்குட்பட்ட ஏரோபிக்ஸ் பிரிவில் கலந்து கொண்ட ஹர்சிதா, நிஹேதா, ஹர்கேஷ் ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பி.செங்கோடன், தலைவர் ஏ.எஸ்.பிரபு ,முதல்வர் தாமோதரன் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள் பாராட்டினர்.