ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் எஜூகேஷனல் சிட்டி சார்பாக ராசிபுரம் அரசு மருத்துவமனையில் "சித்த மருத்துவப் பிரிவில் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா வைரஸ் காய்ச்சல் தடுப்பு மருந்தாக "நிலவேம்பு கஷாயம்" தயாரிப்பதற்கான மின் சாதனம் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், எஜூகேஷனல் சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் எல்.அருண்குமார், செயலர் சி.பாலவெங்கடமணி ஆகியோர் சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் ஆர்.மோகனசுந்தரத்திடம் இதனை வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக மருத்துவமனை மருத்துவ அலுவலர் ஏ.ராஜ்மோகன் பங்கேற்றுப் பேசினார். கிளப் உறுப்பினர்கள் வி.எஸ்.செந்தில்குமார், ஏ.ராஜூ, மூர்த்தி, வேலுமணி, சபரி, எம்.ஜெயகுமார், அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.