அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

டாக்டர் அம்பேத்கரின் 61-ஆம் ஆண்டு நினைவு தினம் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 

டாக்டர் அம்பேத்கரின் 61-ஆம் ஆண்டு நினைவு தினம் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. 
நாமக்கல்லில் இந்திய கண சங்கம் கட்சி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலர் மு.பெ.முத்துசாமி தலைமை வகித்து, அம்பேத்கர் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.  
நிகழ்வில் பொருளாளர் வி. சி.அரங்கசாமி,  தலைமை நிலையச் செயலர் ப.சுப்பிரமணியன், நாமக்கல் மாவட்ட அவைத் தலைவர் பீமன் பெருமாள், செயலர் க.பாலகிருஷ்ணன், பொருளாளர் பா.சின்னசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ராசிபுரத்தில்... விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், பேளுக்குறிச்சி பேருந்து நிலையப் பகுதியில் அம்பேத்கரின் திருஉருவப் படத்துக்கு கட்சியின் மாவட்டப் பொருளாளர் சி.மணிமாலா, விவசாயிகள் பிரிவு மாநில துணைச் செயலர் ஜி.கே.சேகர், சேந்தமங்கலம் ஒன்றியச் செயலர் கவிதா, துணைச் செயலர் து.சரவணன்,  கோட்டை நந்தகுமார், கே.கே.பெரியதம்பி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருச்செங்கோட்டில்... ஆதித்தமிழர் பேரவையினர் புதிய பேருந்து நிலையம் அருகில் அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நகராட்சி அலுவலகம் அருகில் வைக்கப்பட்ட படத்துக்கு ஆதித்தமிழர் தூய்மைத் தொழிலாளர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
நரிப்பள்ளம் பகுதியில் அம்பேத்கார் சிலைக்கு பெரியார் திராவிடர் கழகம், பெரியார் திராவிட விடுதலைக் கழகம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்து வீரவணக்க முழக்கமிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com