நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் வெள்ளிக்கிழமை (டிச.8) நடைபெறவுள்ளது. 

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் வெள்ளிக்கிழமை (டிச.8) நடைபெறவுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், டிசம்பர் மாதத்துக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 8-ஆம் தேதி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு விற்பனையாளர், விற்பனைப் பிரதிநிதி, கண்காணிப்பாளர், மேலாளர், கணினி பயிற்றுநர், கணக்காளர், காசாளர் தட்டச்சர், மெக்கானிக், விற்பனை கண்காணிப்பாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளன. 
டிப்ளமோ, பட்டபடிப்பு மற்றும் பள்ளிப் படிப்பு முடித்த ஆண்கள், பெண்கள் முகாமில் பங்கேற்கலாம். இந்தப் பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் வரும் 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com