பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே உள்ள கொண்டரசம்பாளையம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பசுமைப்படை விழிப்புணர்வு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை (பொ) சுமதி தலைமை வகித்தார்.
திருச்செங்கோடு வட்டார தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாதன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு மாணவ, மாணவியரிடையே இயற்கை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். விழாவில், வில்லிபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் குமரேசன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளியில் இருந்து சைக்கிளில் களப் பயணமாக கொண்டரசம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு சென்று பசுமைப்படை விழாவில் கலந்துகொண்டனர். விழாவில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.