ராசிபுரத்தில் டிச.10-இல் புற்றுநோய் கண்டறியும் முகாம்

ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் இன்னர்வீல் சங்கம், பெங்களூர் நாராயாணா ஹெல்த் சிட்டி ஆகியன இணைந்து வரும்

ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசிபுரம் இன்னர்வீல் சங்கம், பெங்களூர் நாராயாணா ஹெல்த் சிட்டி ஆகியன இணைந்து வரும் 10ஆம் தேதி ராசிபுரம் வித்யா நிகேதன் பள்ளி வளாகத்தில் அனைத்து வகை புற்றுநோய் கண்டறியும் முகாமை நடத்துகிறது.
 இதில் மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், ஈரல் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், எலும்பு புற்றுநோய், சினைபுற்று நோய் போன்றவை குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
 இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் கே. குணசேகர் தெரிவித்துள்ளார். முன் பதிவிற்கு, 94432 22077, 96553 39999 என்ற செல்லிடப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com