பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசைக் கண்டித்து, பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள் சங்கக் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் கிளைத் தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். மாவட்ட உதவி செயலர் ராமசாமி, கிளை செயலர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
செல்லிடப்பேசி கோபுரங்களை தனியார் மயமாக்க கூடாது, 3-ஆவது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும், 2-ஆவது ஊதியக் குழுவில் விடுபட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இரண்டு நாள் நடக்கும் பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டத் தில் 87 ஊழியர்கள் பங்கேற்றதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பரமத்தி வேலூரில்...: பரமத்தி வேலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை முதல் இரு நாள்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு தொலைதொடர்பு நிரந்தர ஊழியர்கள் சங்கத்தின் கிளைத் தலைவர் குழந்தைசாமி தலைமையிலான நிர்வாகிகள், தேசிய தொலைதொடர்பு ஊழியர்கள் சங்கத்தின் கிளை தலைவர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தினர் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com