மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு,

ஊதிய உயர்வு கோரி, மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
நாமக்கல் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சிறப்புத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மின்வாரியத் தொழிலாளர்களுக்கு 1.12.2015 முதல் ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், 1.12.2015 முதல் நிலுவை தொகையை 24 மாதத்துக்கும் சேர்த்து வழங்கிட வேண்டும், களத் தொழிலாளர்களின் பதவி உயர்வை நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று உடனடியாக வழங்கிட வேண்டும், களப்பிரிவில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 
சங்கத் தலைவர் இளங்கோவன், திட்டச் செயலர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com