பாவை கல்வி நிறுவனம்- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து பொறியியல் மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்கும் முகாம்

பொறியியல் படிப்பில் சேரவிரும்பும் மாணவர்களுக்காக பாவை கல்வி நிறுவனங்களில் கல்விக்கடன் வழங்கும் முகாம்

பொறியியல் படிப்பில் சேரவிரும்பும் மாணவர்களுக்காக பாவை கல்வி நிறுவனங்களில் கல்விக்கடன் வழங்கும் முகாம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங் குறித்து வல்லுநர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி அண்மையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
 இதில் 600-க்கும் மேற்பட்ட பொறியியல் படிக்க விரும்பும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டு பயனடைந்தனர். இம் முகாமில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் பாவை கல்வி நிறுவனங்களின் வல்லுநர்களால் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மேலும் பாவை கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டிருக்கும் கல்விக்கடன் பெற விரும்பும் பொறியியல் மாணவர்களும் இம் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர். பாவை கல்வி நிறுவனங்களும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் இணைந்து மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
 இம் முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு கல்விக்கடன் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள்வழங்கப்பட்டன.
 முகாமில் பங்கு கொண்டு பயனடைந்த மாணவ, மாணவியருக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன், தாளாளர் மங்கைநடராஜன், இயக்குநர் (நிர்வாகம்) முனைவர் கே.கே.இராமசாமி, இயக்குநர் (சேர்க்கை), கே.செந்தில் ஆகியோர் வாழ்த்தினர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com