திமுகவினர் ரத்த தானம் அளிப்பு

குமாரபாளையத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம், மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குமாரபாளையத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் 94-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம், மரக்கன்றுகள் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 இந்த நிகழ்ச்சிக்கு, திமுக நகரச் செயலர் கோ.வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் எஸ்.சேகர் முன்னிலை வகித்தார். 27-ஆவது வார்டு கிளைச் செயலர் கே.முருகன் வரவேற்றார். சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் ரத்த தான முகாமை நாமக்கல் மாவட்ட திமுக செயலர் கே.எஸ்.மூர்த்தி தொடக்கி வைத்தார்.
 ஈரோடு ரத்த வங்கி சார்பில் நடத்தப்பட்ட முகாமில் திமுகவினர் 94 பேர் ரத்த தானம் வழங்கினர். தொடர்ந்து, 94 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில், மாவட்டப் பிரதிநிதிகள் டி.சிவக்குமார், என். விஸ்வநாதன், கே.எம்.ரவி, நகரத் துணைச் செயலர்கள் கோவிந்தராஜ், சின்னப்பொன்னு, இளைஞரணி அமைப்பாளர் கே.ரவிக்குமார், அவைத் தலைவர் பரமசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com