கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 3 பேர் கைது

பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம்

பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிக்க முயன்ற மூன்று பேரை பரமத்தி வேலூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 வேலூரைச் சேர்ந்த முருகேசன் மகன் ராஜேஷ்குமார் (24), மோகனூர் செல்வதற்காக வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது, இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த மூன்று மர்ம நபர்கள் திடீரென ராஜேஷ்குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டதாக தெரிகிறது. பின்னர் அவரிடம் இருந்த ரூ.1,450 பறித்துக்கொண்டு தப்பினராம்.
 இதுகுறித்து ராஜேஷ்குமார் பரமத்தி வேலூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வேலூர் நான்குசாலை அருகே போலீஸார் வாகனத் தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனம் ஒன்றில் வந்த மூன்று பேரை நிறுத்தி விசாரணை நடத்தியதில், சேலம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமி மகன் நாகராஜ் (36), கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த அய்யாச்சாமி மகன் ராஜமாணிக்கம் (29), நாமக்கல், பொன்னம்பட்டியைச் சேர்ந்த பழனிசாமி மகன் மாதேஷ் (27) என்பது தெரியவந்தது.
 மேலும், இவர்கள் ராஜேஷ்குமாரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்தும் தெரியவந்தது. இவர்கள் மூன்று பேரும் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதியில் நிகழ்ந்த திருட்டு மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com