நாமக்கல்
குடிநீர் கோரி சாலை மறியல்
திருச்செங்கோடு அருகே குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்செங்கோடு அருகே குடிநீர் விநியோகிக்கக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காட்டுவேலாம்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் வற்றிவிட்டதால், காவிரி குடிநீர் விநியோகத்தையே நம்பியே இப்பகுதி மக்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததால், பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, முறையாக குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல் துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியல் கைவிடப்பட்டது