நாமக்கல்லில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டியதாக, 100 பேருக்கு வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
நாமக்கல் பூங்கா சாலையில் நாமக்கல் போக்குவரத்து காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, தலைக்கவசம் அணியாத 100 வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.100 வீதம் ரூ. 10,000 அபராதம் விதித்தனர்.
மேலும் காப்பீடு காலாவதியான நிலையில் இருசக்கர வாகனங்களை ஓட்டிய 13 நபர்களுக்கு தலா ரூ.1,000 வீதம் ரூ.13,000 உடனடியாக காப்பீட்டுத் தொகை வாங்கப்பட்டது. போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு படக்காட்சி வாகன ஓட்டிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
வாரத்தின் இரண்டு நாள்கள் வாகனத் தணிக்கை நடைபெறும் என போக்குவரத்து துறை அதிகாரிகள்தெரிவித்தனர்.