பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் மேம்பாலத்தை கடக்க முயன்றவர் மீது மினிலாரி மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து மகன் குணசேகர் (45), தறி தொழிலாளி. இவர் செவ்வாய்க்கிழமை பரமத்தி வேலூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு செல்ல பரமத்தி வேலூரில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற மினிலாரி மோதியதில் குணசேகர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திருச்செங்கோட்டைச் சேர்ந்த மினிலாரி ஓட்டுநர் அறிவழகனை (28) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.