குமாரபாளையம் ஸ்ரீராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு பாராட்டு விழா மற்றும் முதலாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் கே.தங்கவேல், தாளாளர் எஸ்.செல்வராஜ், பொருளர் பி.பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கவிஞர் தனிக்கொடி சிறப்புரையாற்றினார்.
விழாவில், வாரியத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.1.03 லட்சம் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், புளியம்பட்டியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்துக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
முன்னதாக, மாணவ, மாணவியருக்கு கல்லூரியில் நடந்து கொள்ளும் முறை, ஒழுக்கம், விதிமுறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து, துறைவாரியாக பேராசிரியர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கல்லூரி அறங்காவலர்கள் எஸ்.கதிர்வேல், எம்.உமா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.