பருப்பு, பாமாயில் விநியோகம்

நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.

நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் விநியோகம் செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் பொதுவிநியோக அங்காடிகளில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகின்றன.
 மேலும், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் போன்ற சிறப்பு பொது விநியோகத்திட்ட பொருள்கள் அனைத்தும் தொடர்ந்து வழங்கும் வகையில் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடும்ப அட்டைக்கு உரிய துவரம் பருப்பு, பாமாயில் பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com