புதிதாக கட்டப்பட்டு பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் உள்ள சேந்தமங்கலம் பேருந்து நிலையத்தை, பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் முன் புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாடகைக் கட்டடத்தில் இயங்கும் சேந்தமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டிக்கொடுக்க வேண்டும். எருமப்பட்டி, சேந்தமங்கலம் வட்டாரத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்ய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். மேலும், இங்கு அறுவைசிகிச்சை அரங்கு, கூடுதல் படுக்கை வசதி, குடிநீóர், கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
நாமக்கல் மாவட்ட தலைமை இடத்தில் அரசு மருத்துவ, சட்ட, பொறியியல் கல்லூரிகளை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கம் எழுப்பினர். ஒன்றியக்குழு உறுப்பினர் வி.ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.துரைசாமி கோரிக்கைகள் குறித்து பேசினார். ஒனறிய செயலர் என்.ஜோதி, முன்னாள் ஒன்றியச் செயலர் பி.பழனிசாமி, சி.செல்லம், எம்.கலா, மல்லிகா, சமதர்மன், கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.