திறனாய்வு தடகளம்: ஸ்ரீ வித்யாமந்திர் பள்ளி மாணவர்கள் சாதனை

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவியர் மண்டல அளவிலான திறனாய்வு தடகளப் போட்டியில் சாதனை புரிந்துள்ளனர்.

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் மாணவ மாணவியர் மண்டல அளவிலான திறனாய்வு தடகளப் போட்டியில் சாதனை புரிந்துள்ளனர்.
 நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், சங்ககிரி கல்வி மாவட்டங்கள் அடங்கிய பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான திறனறி தடகள விளையாட்டுப் போட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அண்மையில் தருமபுரியில் நடைபெற்றது. இதில் இப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி எஸ்.அகல்யா, 100 மீ. ஒட்டத்திலும், டி. ஜீவலட்சுமி நீளம் தாண்டுதல் போட்டியிலும், 8-ஆம் வகுப்பு மாணவர் கே.சுதாகரன் 200 மீ. ஓட்டத்திலும் பங்கேற்றுப் பரிசு பெற்றனர்.
 வெற்றி பெற்ற மாணவ, மாணவியரைப் பள்ளித் தலைவர் கே.குமாரசுவாமி, செயலர் எஸ்.சந்திரசேகர், பொருளாளர் வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com