விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலத் துணைச் செயலர் மு.பெ.குமணனின் தாய் ராஜாமணி அம்மாள் உடல் நலக்குறைவால் அண்மையில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் கட்சித் தலைவர் தொல்.திருமாளவன், ஞாயிற்றுக்கிழமை மாலை நாமக்கல் அருகே முதலைப்பட்டியில் உள்ள குமணன் வீட்டுக்குச் சென்று, ராஜாமணி அம்மாள் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மாவட்டச் செயலர் பழ.மணிமாறன், மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.