கோயில் அருகில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு

கோயில் அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

கோயில் அருகில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
 நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே வெட்டுக்காட்டுப்புதூர் கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியத்திடம் வியாழக்கிழமை அளித்த மனு: நாமக்கல்-கரூர் நான்கு வழிச் சாலையில் பரமத்தி வேலூர் பிரிவு சாலை அருகே டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக் கடைகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அந்தக் கடையை வெட்டுக்காட்டுப்புதூர் பாட்டப்பன் கோயில் அருகில் இடமாற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 கடை அமைய உள்ள பகுதியில் குடியிருப்புகள் உள்ளன. அதுபோல், கடை அமைய உள்ள இடத்தில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் கல்வி நிலையம் செயல்பட்டு வருகிறது. அதனால், இப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com