திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களுக்குள்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவ,மாணவியர் எஸ்எஸ்எல்சி தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இதில் அவ்வை கே.எஸ்.ஆர்.மெட்ரிக். பள்ளியில் 490-க்கு மேல் 3 பேரும், கே.எஸ்.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 490க்கு மேல் 3 பேரும், ஆர்.ஆர். மேல்நிலைப் பள்ளியில் 480-க்கு மேல் ஒருவர், 470-க்கு மேல் இருவரும், தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் இப்பள்ளிகளில் 49 பேர் 490 மதிப்பெண்களுக்கு மேலும், 84 பேர் 480 மதிப்பெண்களுக்கு மேலும், 181 பேர் 450 மதிப்பெண்களுக்கு மேலும், 238 பேர் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 105 பேரும், அறிவியலில் 37 பேரும், கணிதத்தில் 29 பேரும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 12 பேர் 3 பாடங்களிலும், 28 பேர் இரு பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மாணவ, மாணவிகளைத் தாளாளர் கே.எஸ்.ரங்கசாமி, இயக்குநர் அமுதா ஆசைத்தம்பி, முதல்வர்கள் தங்கம்,ஜான்பிரபாகர், தலைமை ஆசிரியர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் பாராட்டினர்.