திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பு

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய நடைபாதை, சாலையோர கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலைய நடைபாதை, சாலையோர கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலையத்தில் பயணிகள் நடப்பதற்குக்கூட இடமில்லாமல் சாலையோர வியாபாரிகள் கடை அமைத்துள்ளனர். ஜூன் மாத தொடக்கத்திலிருந்து அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா நடைபெற இருப்பதால் வெளியூர், வெளி மாநிலங்களிலிருந்து அதிகளவில் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் பேருந்து நிலையப் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு பயணிகளுக்குத் தொல்லை ஏற்படும் வண்ணம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com