பணியின்போது உயிரிழந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ.) குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட ரூ. 3 லட்சம் நிதி உதவியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊரக காவல் நிலையத்தில் பணியாற்றிய சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் எ.பிரபாகரன் கடந்த 2.11.2016-இல் பணியிலிருக்கும்போது உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் தொகைக்கான காசோலையை சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவி ரோஜாராணியிடம் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு வழங்கினார்.