கார் கவிழ்ந்து இளைஞர் சாவு

பரமத்தி வேலூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், இளைஞர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.

பரமத்தி வேலூர் அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், இளைஞர் இறந்தார். மற்றொருவர் காயமடைந்தார்.
பரமத்தி வேலூர் வட்டத்துக்குள்பட்ட எஸ். வாழவந்தி அருகேயுள்ள பெரமாண்டம்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் ரவி (33). இவர் தனது நண்பர் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த உத்திரகுமார் மகன் சங்கருடன் (38), காரில் சனிக்கிழமை நாமக்கல் சென்றார்.
பின்னர், இரவு ஊர் திரும்ப நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மரவாபாளையம் அருகே வந்தபோது, நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழந்தது.
இதில் காரை ஓட்டி வந்த ரவி படுகாயமடைந்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உடன் வந்த குச்சிபாளையத்தைச் சேர்ந்த சங்கர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து பரமத்தி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com