நாமக்கல்லில் ஐப்பசி மாத ஆன்மிக பெருவிழா

நாமக்கல் ஆன்மிக வேள்வி அறக்கட்டளை சார்பில் ஐப்பசி ஆன்மிக பெருவிழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நாமக்கல் ஆன்மிக வேள்வி அறக்கட்டளை சார்பில் ஐப்பசி ஆன்மிக பெருவிழா நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு தலைமை வகித்து விழாவை தொடக்கிவைத்தார். செல்வக்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர் குழந்தைவேல்
வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக ஆன்மிக சொற்பொழிவாளர் ராமலிங்கம் பங்கேற்று பாரதம் காட்டும் பாரதப் பண்பாடு என்ற தலைப்பில் பேசினார். விழாவில் பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணா அரசு கல்லூரி  பேராசிரியர் அரசு பரமேஸ்வரன் நிகழ்ச்சி ஒருங்கிணைத்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை நாமக்கல் ஆன்மிக வேள்வி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com