புதுச்சத்திரம் அருகே களங்காணி பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அரசுப் பள்ளியின் ஆசிரியையின் கழுத்தில் இருந்து தங்க சங்கிலியை மோட்டார் சைக்களில் வந்த இரு இளைஞர்கள் பறித்து சென்றனர்.நாமக்கல் பரமத்திவேலூர் சாலை கொங்கு நகரைச் சேர்ந்தவர் அருளரசு. இவர், கூட்டுறவுத் துறை அலுவலராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி நஞ்சுதா (45). செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பள்ளி நேரம் முடிந்து, திருமலைப்பட்டியில் உள்ள உறவினர்களை பார்ப்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் களங்காணி வழியாக நஞ்சுதா சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் அவரது கழுத்தில் இருந்த 9 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர்.