குழந்தைகள் தின மருத்துவ முகாம்

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குமாரபாளையத்தில் டெக்ஸ்சிட்டி அரிமா சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் தோல் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு குமாரபாளையத்தில் டெக்ஸ்சிட்டி அரிமா சங்கம் சார்பில் இலவச பொது மருத்துவம் மற்றும் தோல் சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
குமாரபாளையம் காவல்நிலையம் அருகே ஓம் சக்தி மருந்துக்கடை வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு அரிமா சங்கத் தலைவர் வி. கோபி தலைமை வகித்தார். முகாமை சங்கத்தின் முன்னாள் தலைவர் எம். தனபால் தொடக்கி வைத்தார். குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ஜி. தினேஷ்குமார், குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்ததோடு, பல்வேறு மருத்துவ, ஆலோசனைகளை வழங்கினார்.
இதில், 125-க்கும் மேற்பட்டோர் குழந்தைகளுடன் பங்கேற்றனர். முகாமில், குழந்தைகளின் உரிமைகள், வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும் முதியவர்களுக்கு பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. டெக்ஸ்சிட்டி அரிமா சங்கச் செயலர் எம். சசிகுமார், பொருளாளர் என்.மோகன், உரிமையாளர் செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com