திருச்செங்கோடு நகர பாஜக செயற்குழுக் கூட்டம்

திருச்செங்கோடு நகர பாஜக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு நகர பாஜக செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நகரத் தலைவர் ரஜினிகாந்த் தலைமையில்  மாவட்ட பொறுப்பாளர்கள் முருகேசன், வக்கீல் நாகராஜன், மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சந்திரமோகன் வரவேற்றார். தனசேகர்  தீர்மானங்களை வாசித்தார். செல்வி நன்றி கூறினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வார்டு  எண் 31இல் எம்ஜிஆர்  நகரில்  கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா இல்லாமல் சிரமப்படும் இப்பகுதி மக்களுக்குப் பட்டா வழங்க வேண்டும். மகாதேவபுரம் 28-வது வார்டில் உள்ள சிறுவர்பூங்காவை அரசு பராமரிக்க வேண்டும். திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் முதல் சேலம் சாலை வரை உள்ள  தடுப்புகளில்  சுவரொட்டிகள் ஒட்டாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். திருச்செங்கோடு நகரில் வாகன நெரிசல் அதிகமுள்ளதால்  தானியங்கி சிக்னல்  அமைக்க வேண்டும் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com