பறிமுதல் வாகனங்கள் நவ.27 இல் பொது ஏலம்

நாமக்கல்லில் மதுவிலக்கு அமலாக்கத் துறை சார்பில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள்

நாமக்கல்லில் மதுவிலக்கு அமலாக்கத் துறை சார்பில் பல்வேறு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் வரும் 27-ஆம் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மதுவிலக்கு காவல் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பிடிபட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல்-திருச்சி சாலை, ஆண்டவர் பங்க் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாமக்கல் மதுவிலக்கு காவல் பிரிவு அலுவலகத்தில் பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் உரிய முன்வைப்பு தொகையை செலுத்தி ஏலத்தில் பங்கேற்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com