திருச்செங்கோடு ஜேசிஐ டெம்பிள் சங்கத்தின் சார்பில் அக்டோபர் 4-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை விட்டல்தாஸ் மஹாராஜ் சுவாமிகளின் நாம சங்கீர்த்தனை பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சி, திருச்செங்கோடு-வேலுசாமி சின்னம்மாள் திருமண மண்டபத்தில் புதன்கிழமை மாலை தொடங்கியது. நிகழ்ச்சியில் பாண்டுரங்க சுவாமிகளின் அவதார பெருமைகளையும், மனிதர்கள் ஆன்மிகத்தோடு இணைந்த வாழ்வினை வாழ்வது குறித்தும் சொற்பொழிவாற்றப்பட்டது.
பின்னர் இசையோடு கூடிய பஜனை நிகழ்ச்சியில் பாடல்கள், புராணக் கதைகள் கூறப்பட்டன. இதில் பலர் கலந்து கொண்டனர்.