அக்.14-இல் பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம்

பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம், வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறை தீர்க்கும் முகாம், வரும் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி: நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும், வருவாய் வட்டங்கள் தோறும் ஏதாவது ஒரு நியாய விலைக் கடையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை மக்கள் குறை தீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
 அதன்படி, அக்டோபர் மாதத்துக்கான பொதுவிநியோகத் திட்ட மக்கள் குறை தீர் முகாம், வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
 நாமக்கல் வட்டத்தில் முதலைப்பட்டி, சேந்தமங்கலம் வட்டத்தில் பேளுக்குறிச்சி, ராசிபுரம் வட்டத்தில் கல்லாங்குளம், கொல்லிமலை வட்டத்தில் சோளக்காடு, திருச்செங்கோடு வட்டத்தில் சத்தியநாய்க்கன்பாளையம், குமாரபாளையம் வட்டத்தில் குமாரபாளையம் அக்ரஹாரம் எம்.ஜி.ஆர். நகர், பரமத்திவேலூர் வட்டத்தில் எம்.ராசாம்பாளையம் ஆகிய ஏழு நியாய விலைக் கடைகளில் வட்ட வழங்கல் அலுவலர்களால் முகாம்கள் நடைபெறவுள்ளன.
 இதில் பொதுவிநியோகத் திட்டத்தை செயல்படுத்தும் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
 பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டை தொடர்பான திருத்தம் மற்றம் பொதுவிநியோகத் திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் இந்த முகாம்களில் தெரிவிக்கலாம்.
 மேலும், பொதுவிநியோகத் திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகள், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்து குறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை தெரிவித்தால், விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com