தேசிய வில்வித்தை போட்டி: நாமக்கல் மாவட்ட மாணவர்கள் தேர்வு

தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு நாமக்கல் மாவட்ட மாணவர்கள் 9 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.

தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு நாமக்கல் மாவட்ட மாணவர்கள் 9 பேர் தேர்வு பெற்றுள்ளனர்.
 தமிழ்நாடு வில்வித்தை சங்கம் சார்பில், 10-ஆம் ஆண்டு மாநில அளவிலான வில்வித்தை போட்டி சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
 இப்போட்டியில், நாமக்கல் மாவட்ட வில்வித்தை சங்கம் சார்பில் 15 பேர் கலந்துகொண்டு மொத்தம் 9 பதக்கங்கள் (தங்கம் 4, வெள்ளி 4, வெண்கலம் 1) வென்றனர்.
 இவர்கள் அனைவரும் வரும் 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெறவுள்ள தேசிய வில்வித்தை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
 வெற்றிபெற்ற வீரர்கள் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
 இந் நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட வில்வித்தை சங்கச் செயலர் மற்றும் மாவட்ட பயிற்சியாளர் கேசவன், உதவி பயிற்சியாளர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com