ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாரை சீரமைக்க கோரிக்கை

கடந்த 5 மாதங்களாக பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாரை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களாக பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாரை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சி பேட்டை காலனி அருந்ததியர் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள்,  காலி குடங்களுடன் நகராட்சி அலுவலகம் வந்து ஆணையர் பி.பாலசுப்ரமணியனிடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்: அருந்ததியர் தெருவில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் மின் மோட்டார் பழுதடைந்து 5 மாதங்களுக்கு மேல் ஆகிறது.  ஆனால்,  இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் தண்ணீர் எடுக்க அருகில் உள்ள தெருவுக்குச் செல்ல வேண்டி இருப்பதால்,  அங்கு உள்ளவர்களுடன் பிரச்னை
ஏற்படுகிறது.
இதனால் பழுதடைந்த ஆழ்துளைக் கிணறு மின் மோட்டாரை சீரமைத்து,  தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com