மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை (அக்.14) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து வேலையற்ற 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இரு பாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாமில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராம, நகர்ப்புறத்தைச் சேர்ந்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொள்ளலாம். சனிக்கிழமை அன்று காலை 9 மணியிலிருந்து 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாமுகாமுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, கல்விச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் நேரில் கலந்து கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா இளைஞர்கள், இளம்பெண்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.