ராசிபுரம் முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் செயலாளருக்கு தெற்காசிய அளவிலான "ஆங்கில கல்வி ஊக்குவிப்பாளர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக ஆங்கிலக் கல்வி தரமதிப்பீட்டுக் குழுவின் சார்பில், தெற்காசிய அளவில் மாணவர்களுக்கான சிறந்த ஆங்கிலக்கல்வி ஊக்குவிப்பாளர் விருதுகள் 25 சிறந்த கல்லூரிக்கு வழங்கப்பட்டன.
சென்னை பிரிட்டிஷ் துணை உயர்நிலைக் குழு அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற "சிறந்த ஊக்குவிப்பு மைய விருது 2016-18 வழங்கும் விழாவில், ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் முத்துவேல் ராமசுவாமிக்கு விருது வழங்கப்பட்டது.
இவ் விருதை பிரிட்டிஷ் உயர்நிலைக் குழுவின் துணை ஆணையர் பரத்ஜோஷி வழங்கினார். விழாவில் கல்லூரியின் புல முதன்மையர் (கல்வி) எஸ். பி. விஜயகுமார், ஆங்கில மொழிப்புலத் துணை மேலாளர் யு. முகம்மது இக்பால் ஆகியோர் உடனிருந்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஆனந்த்பிள்ளை, டாக்டர்.கார்த்திஸ்ரீதர், தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மை செயலர் சுனில் பாலிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.