ராசிபுரம் அருகே வைரஸ் காய்ச்சலுக்கு 7-ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி பகுதியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு பயிலும் அர்ச்சனா என்ற மாணவி வைரஸ் காய்ச்சலுக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்

ராசிபுரம் அருகேயுள்ள காக்காவேரி பகுதியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு பயிலும் அர்ச்சனா என்ற மாணவி வைரஸ் காய்ச்சலுக்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். 
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  
ராசிபுரம் காக்காவேரி ஜெ.ஜெ.காலனி பகுதியில் வசித்துவரும் விவசாயக் கூலித் தொழிலாளியான ராஜா என்பவரின் 12 வயது மகளான அர்ச்சனா,  கடந்த 6-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர்,  தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  ஆனால்,  அங்கு சிகிச்சை பலனின்றி அர்ச்சனா உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com