திருச்செங்கோடு எட்டிமடைபுதூர் பகுதியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விஷ்ணு வித்யாலயா பள்ளி சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். ஊர்வலத்தில் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், துண்டறிக்கை கொடுத்தும் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.