அரசுக் கல்லூரி சிறப்புப் பேராசிரியை மின்சாரம் பாய்ந்து பலி

ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் அரசுக் கல்லூரியின் சிறப்புப் பேராசிரியை மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தார்.

ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் அரசுக் கல்லூரியின் சிறப்புப் பேராசிரியை மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தார்.
சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். இவரது மனைவி சுபாஷினி (37). இவர்களுக்கு 5 வயதில் மாஷிவன் என்ற மகன் உள்ளார்.
சுபாஷினி, சேலம் எடப்பாடி அரசுக் கல்லூரியில் சிறப்புப் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், இவர் சனிக்கிழமை வீட்டில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, குளிர்சாதனப் பெட்டியின் பின்பக்கம் இருந்த மின் ஒயர் மீது இவரது கைப்பட்டதில் மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்தார்.
அவரை உடனடியாக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சுபாஷினி உயிரிழந்தார். போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com