இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்: திமுகவினருக்கு களப் பணியாற்ற அறிவுறுத்தல்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல் போன்ற களப்பணிகளை திமுகவினர் மேற்கொள்ள அக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமில் புதிய வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் பெயர் நீக்குதல் போன்ற களப்பணிகளை திமுகவினர் மேற்கொள்ள அக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கட்சியின் செயற்குழுக் கூட்டம் திருச்செங்கோட்டில்  கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், பரமத்திவேலூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான கே.எஸ். மூர்த்தி கலந்து கொண்டு பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சேகர், நகரச் செயலாளர்கள் ஆர்.நடேசன், கோ.வெங்கடேசன், அ. ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க அரசு  உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டிக்கிறோம்.
அக். 22 ஆம் தேதி நடைபெறும் வாக்குச் சாவடி சிறப்பு முகாமில் 1.1.2018 அன்று 18-வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்த்தலும், இறந்தவர்கள் இடம் மாறி சென்றவர்களின் பெயர்களை நீக்கம் செய்தல் பணிகளையும்  மேற்கொள்ள அந்தந்த ஒன்றிய, நகர, பேரூர், கழக செயலாளர்கள் வாக்குச் சாவடிக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர்களை கொண்டு திருத்தல் பணிகளை மேற்கொள்ளுவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இப்பணிகளை மேற்பார்வையிட மாவட்ட கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய, நகர, பேரூர், பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com