நூற்பாலை தொழிலாளி லாரி மோதி பலி

நல்லூர் அருகே நூற்பாலை தொழிலாளி லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

நல்லூர் அருகே நூற்பாலை தொழிலாளி லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
 சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே ஆண்டிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் சேகர் (22). இவர், பரமத்தி அருகே ஒரு தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு சென்ற அவர், வெள்ளிக்கிழமை மீண்டும் பரமத்திக்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். நல்லூர் உலகபாளையம் அருகே வந்தபோது பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த சேகர், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். நல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநர் ராஜாராமை (43) கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com