பணியின்போது உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நாட்டில் பல்வேறு போலீஸ் படை பிரிவுகளில் பணியின்போது உயிர் தியாகம் செய்த 473 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான நினைவு நாள் நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, காவலர் நினைவுத் தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது போலீஸார் 3 முறை வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பி செந்தில், டி.எஸ்.பி. க்கள் ராஜேந்திரன், மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com