திருச்செங்கோடு ஜேசிஐ, திருச்செங்கோடு டெம்பிள் சங்கம் சார்பில் நகரில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்குத் தலைவர் கவிக்குமார் தலைமை வகித்தார். தலைவர் தேர்வு நடராஜன் வரவேற்றார். செயலர் சங்கர், உதவித் தலைவர்கள் அன்புச்செங்குட்டுவன், பூபதி, சியாம், சத்யன், சைன்வீ சக்திவேல், பிரசன்ன பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்களாக மண்டலத் தலைவர் ராஜேஷ்குமார், முன்னாள் தேசிய சட்ட ஆலோசகர் உலகநாதன் ,மண்டல உதவி தலைவர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். நகரில் சிறப்பாக செயல்பட்டு பணி ஆற்றி வருகிறவர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. சிறந்த மருத்துவராக அரசு மருத்துவமனை மருத்துவர் தேன்மொழி, சிறந்த ஆசிரியராக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியர் ரூபி கேத்தரின் தெரசா, தங்க மங்கை விருதினை விவேகானந்தா கல்வி நிறுவன இயக்குநர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், சிறந்த இளைஞர் விருதை இன்ஜினியர் பிரகாஷ், கமல்பத்ரா விருதை கிருத்திகா கோவிந்தசாமி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.