மர்மக் காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலி

ராசிபுரம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 3 வயது சிறுமி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

ராசிபுரம் அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 3 வயது சிறுமி ராசிபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சனிக்கிழமை உயிரிழந்தார்.
ராசிபுரத்தை அடுத்த கட்டநாச்சம்பட்டியைச் சேர்ந்தவர் பூபதி, கூலித் தொழிலாளி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவர்களது 2-ஆவது மகள் கவிஸ்ரீ (3). இச் சிறுமி கடந்த 4 நாள்களாக மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் வெளிப்புற நோயாளியாக சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
சனிக்கிழமை காய்ச்சல் அதிகமாகவே சிறுமியை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர் . ஆனால், சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் குழந்தை இறப்புக்குக் காரணம் குறித்து சுகாதாரத் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com