தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் ஆண்டகளூர்கேட் வெங்கடேஸ்வரா நடுநிலைப் பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆசிரியர் மன்றத்தின் மாநில துணைத் தலைவர் ப.வையாபுரி தேர்தல் ஆணையாளராகவும், சேலம் மாவட்டச் செயலர் சி.முருகவேள் துணை ஆணையாளராகவும் தேர்தலை நடத்தினர். இதில் மாவட்டத் தலைவராக க.ஆசைதம்பி, துணைத் தலைவர்களாக வெ.ராமசந்திரன், ஆ.பொ.ராஜேந்திரன், மாவட்டச் செயலராக-முருக.செல்வராசன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.