இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து: கல்லூரி மாணவர் பலி

பரமத்தி அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். உடன் வந்த மேலும் இரு மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பரமத்தி அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். உடன் வந்த மேலும் இரு மாணவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பரமத்தி அருகே ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் பயிலும் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த சக்தி (21) என்பவரும், அவரது நண்பர்களான தூத்துக்குடி மாவட்டம், ஆன்டிப்பட்டியைச் சேர்ந்த ஜெயக்குமார் (21),  வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த பிரேம்குமார் (19) ஆகிய 3 பேரும் பரமத்தியில் வசிக்கும் நண்பரைக் காண ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
நாமக்கல்லிலிருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி பிரிவு சாலையில் சாலையைக் கடக்க முயன்றனர். அப்போது மதுரையிலிருந்து சேலம் நோக்கி வந்த கார், மாணவர்கள் மீது மோதியது. இதில் மூன்று மாணவர்களும் படுகாயமடைந்து நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டனர். இதில்  சக்தி (21) திங்கள்கிழமை உயிரிழந்தார்.  மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பரமத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com