கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு சிலை வைக்க முயற்சி

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு சிலை வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. 

நாமக்கல் அரசு மகளிர் கல்லூரியில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு சிலை வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. 
 நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை வாழ்ந்த இல்லம் அரசின் நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு ஒரு நூலகமும் இயங்கி வருகிறது. இதன் வளாகத்தில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளைக்கு பல்வேறு அமைப்பினர் சிலை அமைக்க முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால் பொதுப்பணித் துறையினர் அங்கு சிலை அமைக்க அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில் நாமக்கல்-திருச்சி சாலையில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பெயரில் இயங்கி வரும் அரசு மகளிர் கல்லூரியில் கவிஞருக்கு சிலை வைக்க முயற்சி நடைபெற்று வருகிறது. கல்லூரி நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்பினர் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இதற்கான அரசாணை இன்னும் வரவில்லை என கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com